அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் கருவி: சத்யபிரத சாஹு 
தமிழ்நாடு

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் கருவி: சத்யபிரத சாஹு

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் கருவி பயன்படுத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

DIN


சென்னை: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் கருவி பயன்படுத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சத்யபிரத சாஹு தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கினார்.

அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 88,947 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்காக ஒட்டுமொத்தமாக 1,55,120 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவற்றுடன் 1,14,205 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் இணைக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரத்துடன் 1,20,807  விவிபேட் (வாக்காளர், தான் பதிவு செய்த வாக்கினை சரிபார்க்க உதவும் இயந்திரம்) கருவிகள் இணைக்கப்பட உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் கருவி பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களில் 89,185 பேர் அஞ்சல் மூலம் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். 

தமழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் ரூ.319.02 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதிகப்படியாக சேலத்தில் 44.47 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வலியோடு முறியும் மின்னல்... கீர்த்தி ஷெட்டி!

கூலி படத்தில் கொலை செய்யப்படுவேனா? ஷ்ருதி ஹாசன் விளக்கம்!

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT