நடிகர் அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு, காங்கயத்தில் சனிக்கிழமை அவரது ரசிகர்கள் 36 பேர் ரத்ததானம் செய்தனர்.
காங்கயம், கரூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தல தம்பிகள் நற்பணி மன்றத்தின் சார்பில், அஜித்குமார் ரசிகர்கள் 36 பேர் ரத்ததானம் செய்தனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் ரத்தம் சேகரித்தனர்.
இதில், தல தம்பிகள் நற்பணி மன்றத்தின் தலைவர் ஏ.ஆர்.குப்புசாமி, மன்ற நிர்வாகிகள் கே.லோகநாதன், எம்.சிவநாதன், ஏ.தியாகராஜன், ஞானப்பிரகாஷ், வேர்கள் அமைப்பின் செயலர் வி.சங்கரகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.