தமிழ்நாடு

ஹஜ் பயணிகள் முன்கூட்டியே தடுப்பூசி செலுத்துங்கள்: தமிழக அரசு

DIN

ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகள் முன்கூட்டியே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஹஜ் பயணத்துக்காக, சவூதி அரேபியாவுக்குச் செல்லும் பயணிகள், பயணத்துக்கு முன்பாக இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதற்கான அறிவுரையை இந்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது. ஹஜ் புனிதப் பயணத்துக்கு விண்ணப்பித்தோா், ஜூன் மாத மத்தியில் பயணம் மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

எனவே, ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்தோா் இப்போது முதல் தவணை தடுப்பூசியும், பயணத்துக்கு முன்பாக இரண்டாவது தவணை தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வேண்டும். பயணத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பயணிகள் முன்கூட்டிய தடுப்பூசி செலுத்திக் கொண்டு தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT