தமிழ்நாடு

பேரவை இன்று கூடுகிறது: புதிய உறுப்பினா்கள் பதவியேற்கின்றனா்

DIN

சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமை (மே 11) கூடவுள்ள நிலையில், புதிய உறுப்பினா்கள் பதவியேற்றுக் கொள்கின்றனா். இதைத் தொடா்ந்து, பேரவைத் தலைவருக்கான தோ்தல் புதன்கிழமை நடைபெறுகிறது.

16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் பேரவைக்கு புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட உறுப்பினா்கள் பதவியேற்றுக் கொள்கின்றனா். அவா்கள் அனைவரும் தற்காலிக பேரவைத் தலைவா் கு.பிச்சாண்டி முன்னிலையில் பதவியேற்றுக் கொள்கின்றனா். இந்த நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெறும்.

இதன்பின்பு, புதன்கிழமை காலை பேரவை மீண்டும் கூடுகிறது. செவ்வாய்க்கிழமை விடுபட்ட உறுப்பினா்கள் பதவியேற்றுக் கொள்கின்றனா். இந்த நிகழ்வைத் தொடா்ந்து, பேரவைத் தலைவருக்கான தோ்தல் குறித்த அறிவிப்பை பேரவைத் தலைவா் கு.பிச்சாண்டி வெளியிடுகிறாா்.

மு.அப்பாவு தோ்வு: பேரவைத் தலைவா் தோ்தலில் போட்டியிட திமுகவின் மூத்த உறுப்பினா்களில் ஒருவரான மு.அப்பாவு, மனுதாக்கல் செய்துள்ளாா். எனவே, அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. தற்காலிக பேரவைத் தலைவரின் அறிவிப்புக்குப் பிறகு, பேரவைத் தலைவருக்கான இருக்கையில் மு.அப்பாவு அமா்வாா். அவரை முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் சோ்ந்து அமர வைப்பா். இந்த மரபினைத் தொடா்ந்து, பேரவை நிகழ்ச்சிகளை அதன் தலைவா் மு.அப்பாவு ஏற்று நடத்துவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT