தமிழ்நாடு

பொதுமுடக்க தடையை மீறி ஆணையாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே காய்கறிச் சந்தை

DIN

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குள் பட்ட, கெங்கவல்லி அருகே உள்ள ஆணையாம்பட்டி ஊராட்சி கெங்கவல்லியிலிருந்து வீரகனூர் சாலையில் உள்ள ஆணையாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் காய்கறி வாரச்சந்தை தற்போது வெள்ளிக்கிழமை காலை முதல் நடைபெற்று வருகிறது. 

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த இரு நாள்களுக்கு முன்னர், காய்கறி சந்தைகளுக்கு தடை விதித்துள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும் உழவர் சந்தைகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடையை மீறி , ஆணையாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலேயே தற்போது வார, காய்கறிச் சந்தை தடையை மீறி, தொற்று பரவும் வகையில் நடந்து வருவதால் அப்பகுதி மக்களிடையே கரோனா  தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஆணையாம்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் சந்தையை கலைக்க அவர்களிடம் அறிவுறுத்தியும் சந்தை கலைக்கப்படாமல் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT