முகப்பு
தமிழ்நாடு

கரோனா உறுதியா?: 'முதலில் பரிசோதனை மையங்களை அணுகவும்'

சென்னையில் கூடுதலாக சித்த மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
மா.சுப்பிரமணியன் (கோப்புப்படம்)
பகிர்:

சென்னையில் கூடுதலாக சித்த மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது, சித்தா சிகிச்சை மையங்களில் சுமார் 200 படுக்கைகள் காலியாக உள்ளன.

கரோனா தொற்று உறுதியானால், அச்சமடைந்து மக்கள் உடனே மருத்துவமனைக்கு வர வேண்டாம். 

கரோனா உறுதியானால் அருகாமையில் உள்ள பரிசோதனை மையங்களை முதலில் அனுக வேண்டும். அங்கு முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

890 மருத்துவமனைகள் காப்பீடு திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு பலகை வைக்கவும் மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.