தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட செய்தியில்,
தென் தமிழகத்தையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டையில் மிக கனமழையும், திருச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சேலம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தீபாவளியன்று(நாளை)
நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடனும் நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.