FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கந்த சஷ்டி நிறைவு: திருத்தணி முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்

கந்த சஷ்டி விழாவின் நிறைவாக, திருத்தணி முருகன் கோயிலில் இன்று நடந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள்  தரிசனம் செய்தனர்.

Updated On : 10 நவம்பர் 2021, 2:17 pm IST
திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்றுவந்த கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று வள்ளி தெய்வானைக்கு நடைபெறும் திருக்கல்யாணம் வைபவம்.
பகிர்:

திருத்தணி: கந்த சஷ்டி விழாவின் நிறைவாக, திருத்தணி முருகன் கோயிலில் இன்று நடந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள்  தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட சீர்வரிசை.

திருத்தணி முருகன் கோயிலில், கந்த சஷ்டி விழா கடந்த, 4ம் தேதி முதல் நடந்து வருகிறது.  செவ்வாய்க்கிழமை உற்சவர் சண்முகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் புஷ்பாஞ்சலி நடந்தது. 

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட சீர்வரிசை.

இன்று முருகன் - வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடந்தது. தொற்று காரணமாக பக்தர்கள் அமர்ந்து தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் நின்று சுவாமியை வழிபட அனுமதிக்கப்பட்டது.  நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமியை வழிபட்டனர். 

Advertisement

Advertisement

திருக்கல்யாண கோலத்தில் காட்சி தரும் சண்முகர்.

இன்று  திருக்கல்யாணம் நிகழ்ச்சியுடன் கந்த சஷ்டி விழா நிறைவு அடைந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி, கோயில் பேக்ஷ்கார்கள் பழனி, வேலு மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments