தமிழ்நாடு

அவிநாசி அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

DIN

அவிநாசி: அவிநாசி அருகே எம். நாதம்பாளையத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை அதிகாலை படுகாயமடைந்தனர். 

பெங்களூரில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கோவை-சேலம் ஆறு வழிச்சாலை அவிநாசி நாதம்பாளையம் பிரிவு அருகே வரும்போது சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

அவிநாசி அருகே எம். நாதம்பாளையத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.

இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவிநாசி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து அவிநாசி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT