தமிழ்நாடு

நெல்லை மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதன்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் பாளையங்கோட்டை மானூர் அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 12 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 122 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 204 கிராம ஊராட்சித் தலைவா், 1,731 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 2,069 பதவியிடங்களுக்கு நேரடித் தோ்தல் நடைபெறுகிறது. 

இதில், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூா், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்டமாக புதன்கிழமை (அக். 6) வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல்கட்ட தோ்தலில் 1,69,765 ஆண் வாக்காளா்கள், 1,78,234 பெண் வாக்காளா்கள், 43 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 3,48,042 போ் வாக்களிக்கவுள்ளனா். பாதுகாப்புப் பணியில் 2,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT