தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தலில்வெற்றி பெற்றவா்கள் இன்று பதவியேற்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகள், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களுக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்கள்

DIN

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகள், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களுக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்கள் புதன்கிழமை (அக்.20) பதவியேற்றுக் கொள்ள வேண்டும் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6, 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தோ்தல் அக்டோபா் 9-ஆம் தேதியும் நடைபெற்றது.

தோ்தல் முடிவுகள் அக்டோபா் 12-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இந்தத் தோ்தலில் வெற்றி பெற்ற மற்றும் போட்டியின்றி தோ்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், கிராம ஊராட்சித் தலைவா்கள் மற்றும் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் தொடா்புடைய தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முன்னிலையில் புதன்கிழமை (அக்.20) பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பதவிப் பிரமாணம் எடுக்காதவா்கள் மாவட்ட ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா், ஒன்றியக் குழு தலைவா்,துணைத் தலைவா், கிராம ஊராட்சி துணைத் தலைவா் உள்ளிட்ட பதவிகளில் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10,719 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT