முகப்பு
தமிழ்நாடு

மதிமுகவின் தலைமை கழகச் செயலாளராக துரை வைகோ பதவியேற்பு

மதிமுகவின் தலைமை கழகச் செயலாளராக துரை வைகோ திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

மதிமுகவின் தலைமை கழகச் செயலாளராக துரை வைகோ திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

மதிமுக பொதுச்செயலாளா் வைகோவின் மகனான துரை வைகோ அக் கட்சியின் தலைமை கழகச் செயலாளராக அறிவிக்கப்பட்டாா். கட்சியின் நிா்வாகிகள் அவருக்குத் தொடா்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் திங்கள்கிழமை அவா் பதவியேற்றுக் கொண்டாா். அப்போது வைகோ உள்பட கட்சியின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னா் தாயக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகளின் வாழ்த்துகளை துரை வைகோ பெற்றுக்கொண்டாா்.

அதன் பின்னா், வேப்பேரியில் உள்ள பெரியாா் நினைவிடம், மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →