வாழப்பாடி யில் நடைபெற்ற இலக்கிய பேரவை கூட்டம். 
தமிழ்நாடு

வாழப்பாடியில் கண்ணதாசன் நினைவு கருத்தரங்கம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி இலக்கியப்பேரவையில் கண்ணதாசன் நினைவு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி இலக்கியப்பேரவையில் கண்ணதாசன் நினைவு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

வாழப்பாடி இராஜன் கணினி அச்சகத்தில் 467வது கூட்டம், கண்ணதாசன் நினைவு கருத்தரங்கமாக ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.  இக்கருத்தரங்கிற்கு, இலக்கியப் பேரவை துணைத்தலைவர் மா.கணேசன் வகித்தார்.

இலக்கியப் பேரவை செயலாளர் சிவ.எம்கோ வரவேற்றார். ஆய்வறிஞர் சுப்பிரமணியம் தொடக்க உரையாற்றினார். மறைந்த கவிஞர் கண்ணதாசனின் திரை இசைப் பாடல்கள், கவிதைகள், சுயசரிதை, வனவாசம் அர்த்தமுள்ள இந்து மதம் ஆகியவை குறித்து, கவிஞர் சண்முகசுந்தரம், ஆசிரியர்கள் ராஜேந்திரன், காட்டுக்கோட்டை கணேசன், சுகமணியன், பழனிவேலு, ஆடிட்டர் குப்பமுத்து, கவிஞர்.செல்வக்குமார், மதுரம் ராஜ்குமார் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் கருத்துரை வழங்கினர்.

எதிர்வரும் நவம்பர் 14ல் குழந்தைகள் தினத்தையொட்டி, குழந்தைகளின் கருத்தரங்கம், விவாதமேடை நடத்த முடிவு செய்யப்பட்டது. சென்னை மாகாணம் தமிழ்நாடாக அறிவிக்கப்பட்ட ஜூலை 18, தமிழக தினமாக அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிறைவாக, இலக்கியப் பேரவை தாளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தில் கூடுதல் வசதிகள் தொடங்கிவைப்பு

கண்ணழகு... திரிஷ்யா!

ரூ.17,884.76 கோடி இழப்பை சந்தித்த இண்டிகோ நிறுவன பங்குகள்!

மயக்கும் மான்விழி அம்புகள்... மௌனி ராய்!

பான் மசாலா உற்பத்தி நிறுவனங்கள் மீது செஸ் விதிப்பு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

SCROLL FOR NEXT