அயோத்திதாசர் பண்டிதரின் 175ஆம் ஆண்டு விழாவையொட்டி மணிமண்டபம் கட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் இன்று விதி 110ன் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:
அயோத்திதாசர் பண்டிதரின் பெருமையை போற்றும் வகையில், அவரது 175ஆவது ஆண்டு விழாவையொட்டி வடசென்னை பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றார்.