தமிழ்நாடு

மாணவர் தனுஷ் உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி

DIN


மேட்டூர்: நீட்தேர்வு அச்சம் காரணமாக  உயிரிழந்த மாணவர் தனுஷ் உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கூழையூரில் நீட்தேர்வு அச்சம் காரணமாக உயிரிழந்த மாணவன் தனுஷ் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மாணவன் தனுஷ் உடலுக்கு முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மாணவனின் பெற்றோர் கதறி அழுதனர்.

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT