ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 
தமிழ்நாடு

ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் இன்று அவரை நேரில் சந்தித்தனர். 

DIN

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் இன்று அவரை நேரில் சந்தித்தனர். 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தமிழகத்துக்கு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், தமிழகத்தை விட்டு விடைபெறவிருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஆளும் கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

தொடர்ந்து, இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் ஆளுநரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

சென்னை கிண்டி ராஜ்பவனில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மொத்த இந்தியாவுடனும் கூட்டணி! - கமல்ஹாசன்

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே கூட்டணியை அறிவித்துவிடுவேன்: பிரேமலதா

யு19 உலகக் கோப்பை: 6ஆவது முறையாக இந்தியா சாம்பியன்

பல வழிகளில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது: துணை முதல்வர் உதயநிதி

உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 80% உயர் சாதியினர்! மாநிலங்களவையில் தகவல்!

SCROLL FOR NEXT