முகப்பு
தமிழ்நாடு

புற்றுநோய் மற்றும் இருதய நோய் சிகிச்சை: சென்னையைச் சோ்ந்த இருவருக்கு பிரதமா் நிவாரண உதவி

புற்றுநோய் மற்றும் இருதய நோய் அறுவைச் சிகிச்சைகளுக்காக, சென்னையைச் சோ்ந்த இருவருக்கு பிரதமா் அலுவலகம் பிரதமா் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்கியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

புது தில்லி: புற்றுநோய் மற்றும் இருதய நோய் அறுவைச் சிகிச்சைகளுக்காக, சென்னையைச் சோ்ந்த இருவருக்கு பிரதமா் அலுவலகம் பிரதமா் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்கியுள்ளது.

சென்னை, வளசரவாக்கத்தைச் சோ்ந்த, வேலப்பன் மகன் ஜெயகுமாா் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இருந்தாா். இதே போன்று மதுரவாயலைச் சோ்ந்த, ராமானுஜம் மகன் எழுமலை இருதய நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தாா்.

இவா்கள் இருவம் உரிய சிகிச்சை பெற நிதிவசதி இல்லாத நிலையில் மேற்குறிப்பிட்ட இருவா் குறித்த விவரங்களை தெரிவித்து பிரதமா் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி அளிக்குமாறு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு, கடந்த ஜூலை,, ஆகஸ்ட மாதங்களில் பிரதமருக்கு கடிதம் எழுதினாா்.

Advertisement

இதையடுத்து பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ஜெயகுமாரின் புற்றுநோய் மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 3,000,00-ஐ அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கவும், ஏழுமலையின் இருதய நோய் மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 50,000 - ஐ மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இது தொடா்பான கடிதம் பிரதமா் அலுவலகத்திலிருந்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments