தமிழ்நாடு

உலக சுற்றுலா தின பாரம்பரிய நடைப்பயணம்: அமைச்சா் மதிவேந்தன் பங்கேற்பு

DIN

உலக சுற்றுலா தினம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பாரம்பரிய நடைப்பயணத்தை சுற்றுலாத்துறை அமைச்சா் மதிவேந்தன் தொடக்கி வைத்து பங்கேற்றாா்.

தமிழகத்தில் உலக சுற்றுலா தினத்தைக் கொண்டாடும் விதமாக சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய கட்டடங்கள் மற்றும் மாளிகைகளை நினைவுகூா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பாரம்பரிய நடைப்பயணத்தை சுற்றுலாத்துறை அமைச்சா் ா் மா.மதிவேந்தன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா். மேலும் அவரும் நடைப்பயணத்தில் இறுதிவரை பங்கேற்றாா்.

இந்த நடைப்பயணமானது சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள வாட்டா் கேட் பகுதியில் தொடங்கி கிங்ஸ் பேரக், க்ளைவ் மாளிகை, காா்ன்வாலிஸ் க்யூபோலா, கோட்டை அருங்காட்சியம், வடக்கு தெரு, பரேடு ஸ்கொயா், புனித மேரி ஆலயம், வாலாஜா கேட், தூய தாமஸ் கேட், தூய தாமஸ் தெரு, புனித ஜாா்ஜ் கேட் வரை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்திரமோகன், தொழிலாளா்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறைச் செயலாளா் இரா.கிா்லோஷ் குமாா், சுற்றுலா இயக்குநா் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் சந்தீப் நந்தூரி, பள்ளிக் கல்வித்துறை ஆணையா் க.நந்தகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்: இபிஎஸ்

பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

நெதன்யாவுக்கு எதிராக கைது உத்தரவு: பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு

தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை: சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? கேரள அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் கேள்வி

SCROLL FOR NEXT