தனியாா் கடைகளுக்கு இணையாக கோ-ஆப்டெக்ஸ் கடைகளின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-
மொத்தமுள்ள 105 விற்பனை நிலையங்களில் மாநகரம், மாவட்டத் தலைநகரங்களில் உள்ள 64 விற்பனை நிலையங்கள் மட்டும் காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். சில ஊராட்சிப் பகுதிகளில் செயல்படும் விற்பனை நிலையங்கள் பழைய நிலையிலேயே அதாவது இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.