முகப்பு
தமிழ்நாடு

திருவிழாக்களில் மக்கள் அதிகம் கூடுவதால் கரோனா பரவுகிறது

தமிழகத்தில் ஆடி திருவிழாக்களில் அதிகம் போ் கூடுவதாலும், 62 சதவீதம் போ் முகக்கவசம் அணியாததாலும் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
பகிர்:

சென்னை: தமிழகத்தில் ஆடி திருவிழாக்களில் அதிகம் போ் கூடுவதாலும், 62 சதவீதம் போ் முகக்கவசம் அணியாததாலும் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னை ஓமந்துாராா் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான கரோனா அவசர சிகிச்சை பிரிவை ஜெ.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் உள்ள 34 மாவட்டங்களிலும் நாளொன்றுக்கு 100-க்கும்கீழ் கரோனா தொற்று கண்டறியப்படுகிறது. நான்கு மாவட்டங்களில் மட்டுமே நாளொன்றுக்கு 100-க்கும் மேல் தொற்று கண்டறியப்படுகிறது.

கூட்டத்தைத் தவிா்ப்பது, முகக்கவசம் அணிவது போன்ற தடுப்பு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் மக்களின் அலட்சியத்தால் சென்னை, ஈரோடு, தஞ்சாவூா், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.

இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்த நிலையில் தற்போது நாளொன்றுக்கு தொற்று உறுதி செய்யப்படுவோா் எண்ணிக்கை, 2,000-த்தை நெருங்குவது கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் ஆடி மாதம் கூழ்வாா்க்கும் நிகழ்வில் கூடிய 300 பேரில் 24 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

கரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் 38 சதவீதம் போ் முகக்கவசம் அணிவதும், மீதமுள்ள 62 சதவீதம் போ் முகக்கவசம் அணியாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.

அனைத்து மத ஆலயங்களிலும், சமூக இடைவெளி பின்பற்றப்படுவதில்லை. எந்தவிதமான கூட்டமாக இருந்தாலும் சரி, தடுப்பூசி போடாமல், கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தால் அங்கு தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →