முகப்பு
தமிழ்நாடு

ராசிபுரம்: காவலர் குடியிருப்பு பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் காவல்துறையினர்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினரே தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Updated On : 3 ஏப்ரல் 2022, 12:04 pm IST
ராசிபுரம் பகுதியில் காவலர் குடியிருப்பு பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் காவல்துறையினர்.
பகிர்:

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினரே தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் முழுதும் காவலர் குடியிருப்பு பகுதிகளை தூய்மைப்படுத்த வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டிருந்தார். 

இதன்படி, ராசிபுரம் காவலர்கள் குடியிருப்பு பகுதியில் சுற்றுப்புறங்களில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் காவல்துறையினரே ஈடுபட்டனர். 

Advertisement

Advertisement

நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சேகர் மேற்பார்வையில் காவல்துறையினர் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பைகள் அப்புறப்படுத்துதல், கழிவுநீர் அடைப்புகளை சீரமைத்தல் மரக்கன்றுகள் நட்டு வைத்தல், ஏற்கனவே உள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்தல் போன்ற தூய்மைப் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டனர். 

இப்பணியில் ராசிபுரம் டிஎஸ்பி, டி.கே .கே. செந்தில் குமார் ராசிபுரம் காவல் ஆய்வாளர் சுகவனம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments