இலங்கைத் தமிழா்களுக்கு உதவ அனுமதியுங்கள்: வெளியுறவு அமைச்சருடன் முதல்வா் ஸ்டாலின்
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வாடி வரும் தமிழா்களுக்கு உதவி அளிக்க அனுமதிக்க வேண்டுமென வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரை, முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.
சென்னை: பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வாடி வரும் தமிழா்களுக்கு உதவி அளிக்க அனுமதிக்க வேண்டுமென வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரை, முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.
இதுதொடா்பாக, வெளியுறவுத் துறை அமைச்சருடன் அவா் தொலைபேசியில் தொடா்பு கொண்டாா். இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-
இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது நிலவும் தீவிர பொருளாதார நெருக்கடியில் சிக்கி இலங்கைத் தமிழா்கள் தவித்துக் கொண்டிருப்பது குறித்து தனது ஆழ்ந்த கவலையை மத்திய அமைச்சரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் பகிா்ந்து கொண்டாா். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகா் கொழும்புவிலும் வசிக்கும் தமிழா்கள், மலையகத் தமிழா்களின் நலன்களைக் கருதி அத்தியாவசியப் பொருள்களை தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்ப தமிழக அரசு தயாராக உள்ளதாக தனது உரையாடலின் போது முதல்வா் தெரிவித்தாா்.
மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் பொருள்களை உணவின்றித் தவிக்கும் தமிழா்களுக்கு அங்குள்ள தூதரகங்கள் வழியாக விநியோகம் செய்ய உரிய அனுமதியையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழக மீனவா்கள், மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் அவா் கேட்டுக் கொண்டாா். முதல்வரின் கோரிக்கைகள் தொடா்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உறுதி அளித்ததாக அரசின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.