தமிழ்நாடு

நரிக்குறவ மாணவி வீட்டில் உணவருந்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

DIN

சென்னை திருமுல்லைவாயல் குடியிருப்புப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவி ஒருவரின் வீட்டில் உணவு மற்றும் தேநீர் அருந்தினார். 

சென்னை திருமுல்லைவாயில் நரிக்குறவர் காலனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் நரிக்குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, முதியோர் உதவித் தொகை என நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

ஏற்கெனவே, விடியோ அழைப்பில், நரிக்குறவ மாணவி ஒருவர் முதல்வரை வீட்டிற்கு அழைத்திருந்தார். முதல்வரும் வருவதாக உறுதி அளித்திருந்தார். 

இதையடுத்து இன்று மாணவி திவ்யாவின் வீட்டிற்கு முதல்வர் சென்று அங்கு உணவு மற்றும் தேநீர் அருந்தினார். முன்னதாக நரிக்குறவ மாணவிகள், அவருக்கு பாசிமாலை அணிவித்தும், பூ கொடுத்தும் வரவேற்றனர். 

இதன் தொடர்ச்சியாக நரிக்குறவ மக்கள் முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT