தமிழ்நாடு

1-8 ஆம் வகுப்பு வரை நாளை(ஏப்.23) பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளில் மேலாண்மைக்குழு அமைக்கப்பட உள்ளதால் நாளை தமிழகத்தில் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

தமிழகத்தில் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை(ஏப். 23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடுநிலைப் பள்ளிகளில் மேலாண்மைக்குழு அமைக்கப்பட உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலாண்மைக்குழு கூட்டத்தில் ஆசிரியர்கள் கலந்துகொள்ளவிருப்பதால் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே, கோடை வெப்பம் காரணமாக பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT