முகப்பு
தமிழ்நாடு

பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம்

தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் சொத்துகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:05 AM
பகிர்:

தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் சொத்துகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் குரூப் ஏ மற்றும் குரூப் பி அதிகாரிகளின் சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் ஆய்வில் கணக்கில் வராத சொத்துகளைக் கொண்டிருக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாகிகள் மற்றும் அலுவலர்களின் சொத்துகளையும் ஆராய வேண்டும் எனவும் அதிகாரிகளின் ஊழல்களை வெளிக்கொண்டுவரும் சோதனையில் போதிய காவல்துறையினரை காவல்துறைத் தலைவர் ஒதுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.