தமிழ்நாடு

நிலக்கரி வருகை: தூத்துக்குடியில் மேலும் 2 அலகுகளில் மின் உற்பத்தி

நிலக்கரி வந்ததையடுத்து தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மேலும் 2 அலகுகளில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

DIN

நிலக்கரி வந்ததையடுத்து தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மேலும் 2 அலகுகளில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன் மூலம் நாள்தோறும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபமாக நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இங்கு மின் உற்பத்தி அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. 

போதிய நிலக்கரி இல்லாததால் நேற்று முதல் அலகில் மட்டும் மின் உற்பத்தி நடைபெற்றது. இதனால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று 29,000 டன் நிலக்கரி வந்ததையடுத்து, மேலும் 2 அலகுகளில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. தற்போது 1,2,3 ஆகிய மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT