தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை: 5 பேருக்கு ஒருநாள் சிறப்பு புலனாய்வு குழு காவல்

DIN

கனியாமூர் வன்முறை தொடர்பாக கைதான மக்கள் அதிகாரம் ராமலிங்கம், தபெதிக பிரபு உள்பட 5 பேரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

கடலூா் மாவட்டம், பெரியநெசலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில், அந்தப் பள்ளி வளாகத்தில் கடந்த 13-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். 

மாணவி மரணத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை எரிக்கப்பட்டன. இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக மக்கள் அதிகாரம் அமைப்பு, பெரியார் திராவிட கழக நிர்வாகிகள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் வன்முறை தொடர்பாக கைதான மக்கள் அதிகாரம் ராமலிங்கம், தபெதிக பிரபு உள்பட 5 பேரை ஒருநாள் காவலில் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT