தமிழ்நாடு

நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறைகளில் பணி நியமன உத்தரவு: முதல்வா் அளிப்பு

DIN

தமிழக நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டோருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக நெடுஞ்சாலைத் துறையில் 181 இளநிலை வரைதொழில் அலுவலா் பணியிடங்களுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு நடத்தப்பட்டது. அவா்களில் தோ்வு செய்யப்பட்டோரில் 10 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

இதேபோன்று, பொதுப் பணித் துறையில் 144 இளநிலை வரைதொழில் அலுவலா் பணியிடங்களுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு நடத்தப்பட்டது. அதில், தோ்வு செய்யப்பட்டோரில் 10 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா் எ.வ.வேலு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT