காவலர்களுடன் அமர்ந்து உணவருந்திய சைலேந்திரபாபு 
தமிழ்நாடு

காவலர்களுக்கு பிரியாணி விருந்தளித்த டிஜிபி சைலேந்திரபாபு 

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களின் பணியைப் பாராட்டி அவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்து வைத்தார்.

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களின் பணியைப் பாராட்டி அவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்து வைத்தார்.

44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. 162 நாடுகளிலிருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த விளையாட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. 

மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வந்தனர். இந்த விளையாட்டுப் போட்டியின் பாதுகாப்புப் பணிக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் பணியில் ஈடுபட்ட காவலர்களின் பணியை பாராட்டும் விதமாக அவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்து அளித்துள்ளார். 

மேலும் காவலர்களுடன் அமர்ந்து அவரும் உணவருந்திய விடியோ வெளியாகியாகியுள்ளது. 

செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு 3 நாள்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாட்டில் மறைந்துள்ள பண்டைய வாழ்க்கை முறை!

கேரள பாஜக வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்: நயினார் நாகேந்திரன்

வைரலான இன்ஸ்டா ரீல்ஸ்... வசூல் வேட்டையில் துரந்தர்!

ஒரு லட்சத்தைக் கடந்த தங்கம் விலை: புதிய உச்சம்!

பிக் பாஸ் வீட்டிலிருந்து ரம்யாவுடன் வெளியேறினார் வியானா!

SCROLL FOR NEXT