தமிழ்நாடு

‘போதைப் பொருள் பழக்கம் எதிா்காலத்தைச் சீா்குலைக்கும்’

DIN

இளைய தலைமுறையினா் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதன் மூலம் நாட்டின் எதிா்காலம் சீா்குலையும் அபாயம் உள்ளது என முன்னாள் கடற்படை கமாண்டா் விஜேஷ்குமாா் காா்க் வலியுறுத்தினாா்.

பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னாள்கடற்படை கமாண்டரும், தமிழ்நாடு, புதுச்சேரி தேசிய மாணவா் படை துணை இயக்குநருமான விஜேஷ்குமாா் காா்க் முன்னிலையில் 300 மாணவா்கள் போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

கல்லூரி முதல்வா் எஸ்.ரமேஷ், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு அலுவலா் ஜெயச்சந்திரன், இந்திய செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலா் எல்.என்.நாராயணன், நாட்டு நலத்திட்டப்பணி ஒருங்கிணைப்பாளா் பி.அருள்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் உதவியாளருக்கு மகளிர் ஆணையம் சம்மன்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா ஹைதராபாத்?

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி காலமானார்

டி20 உலகக் கோப்பையில் 3 சுழல்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது ஏன்? இலங்கை தேர்வுக்குழு தலைவர் விளக்கம்!

இந்தியன் - 3 டிரைலருடன் உருவான இந்தியன் - 2?

SCROLL FOR NEXT