சக்தி மசாலா நிறுவனம் சார்பில் பேடியா ஹால் கட்டுவதற்கு ரூ.20 லட்சம் நன்கொடைக்கான காசோலையை சங்க நிர்வாகிகளிடம் வழங்கிய சக்திமசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி.துரைசாமி, டாக்டர் சாந்திதுரைசாமி. 
தமிழ்நாடு

சக்தி மசாலா சார்பில் பேடியா ஹால்: கட்டட நிதியாக ரூ.25 லட்சம் நன்கொடை

சக்தி மசாலா சார்பில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் பேடியா ஹால் கட்டடம் கட்டுவதற்கு நிதியாக ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.

DIN


ஈரோடு: சக்தி மசாலா சார்பில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் பேடியா ஹால் கட்டடம் கட்டுவதற்கு நிதியாக ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பேடியா ஹால் கட்டடம் வீரப்பம்பாளையத்தில் விவேகானந்தா நகரில் கட்டப்பட்டு வருகிறது. கட்டடம் கட்டுவதற்கு, சக்தி மசாலா நிறுவனம் சார்பில் கடந்த ஜனவரி மாதம் ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. தற்போது, மேலும் ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.  

சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி.துரைசாமி, நிர்வாக இயக்குநர் டாக்டர் சாந்திதுரைசாமி, பேரன் செங்கதிர்வேலவன் ஆகியோர் ரூ.20 லட்சத்துக்கான காசோலையை, கூட்டமைப்பின் தலைவர் வி.கே.ராஜமாணிக்கம், பொதுச் செயலாளர் பி.ரவிசந்திரன், பொருளாளர் ஆர்.முருகானந்தம் ஆகியோரிடம் வழங்கினர். இக்கட்டடத்துக்கு பேடியா சக்தி மசாலா மஹால் என்று பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சக்தி மசாலா நிறுவனம் சார்பில் பேடியா ஹால் கட்டுவதற்கு ரூ.20 லட்சம் நன்கொடைக்கான காசோலையை சக்திமசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி.துரைசாமி, நிர்வாக இயக்குநர் டாக்டர் சாந்திதுரைசாமி ஆகியோர், சங்க நிர்வாகிகளிடம் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT