சக்தி மசாலா நிறுவனம் சார்பில் பேடியா ஹால் கட்டுவதற்கு ரூ.20 லட்சம் நன்கொடைக்கான காசோலையை சங்க நிர்வாகிகளிடம் வழங்கிய சக்திமசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி.துரைசாமி, டாக்டர் சாந்திதுரைசாமி. 
தமிழ்நாடு

சக்தி மசாலா சார்பில் பேடியா ஹால்: கட்டட நிதியாக ரூ.25 லட்சம் நன்கொடை

சக்தி மசாலா சார்பில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் பேடியா ஹால் கட்டடம் கட்டுவதற்கு நிதியாக ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.

DIN


ஈரோடு: சக்தி மசாலா சார்பில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் பேடியா ஹால் கட்டடம் கட்டுவதற்கு நிதியாக ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பேடியா ஹால் கட்டடம் வீரப்பம்பாளையத்தில் விவேகானந்தா நகரில் கட்டப்பட்டு வருகிறது. கட்டடம் கட்டுவதற்கு, சக்தி மசாலா நிறுவனம் சார்பில் கடந்த ஜனவரி மாதம் ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. தற்போது, மேலும் ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.  

சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி.துரைசாமி, நிர்வாக இயக்குநர் டாக்டர் சாந்திதுரைசாமி, பேரன் செங்கதிர்வேலவன் ஆகியோர் ரூ.20 லட்சத்துக்கான காசோலையை, கூட்டமைப்பின் தலைவர் வி.கே.ராஜமாணிக்கம், பொதுச் செயலாளர் பி.ரவிசந்திரன், பொருளாளர் ஆர்.முருகானந்தம் ஆகியோரிடம் வழங்கினர். இக்கட்டடத்துக்கு பேடியா சக்தி மசாலா மஹால் என்று பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சக்தி மசாலா நிறுவனம் சார்பில் பேடியா ஹால் கட்டுவதற்கு ரூ.20 லட்சம் நன்கொடைக்கான காசோலையை சக்திமசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி.துரைசாமி, நிர்வாக இயக்குநர் டாக்டர் சாந்திதுரைசாமி ஆகியோர், சங்க நிர்வாகிகளிடம் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT