மனைவியை அடித்துக் கொலை செய்த கணவா் கைது
சென்னை சூளைமேட்டில் மனைவியை அடித்துக் கொலை செய்ததாக கணவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை சூளைமேட்டில் மனைவியை அடித்துக் கொலை செய்ததாக கணவா் கைது செய்யப்பட்டாா்.
சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரத்தை சோ்ந்தவா் வே. பழனி (31). இவா், காா் ஓட்டுனராக வேலை செய்து வந்தாா். பழனியின் மனைவி பாரதி (25). காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இத் தம்பதிக்கு, இரு மகன்கள் உள்ளனா். பாரதி, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ளல் ஒரு டீ கடையில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் பழனி, தனது மனைவி பாரதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு தகராறு செய்து வந்தாா். மேலும் சரியாக வேலைக்குச் செல்லாமல் மது அருந்திக் கொண்டு, பழனி ஊதாரித்தனமாக இருந்து வந்தாா். இந்நிலையில் பழனி, வியாழக்கிழமை இரவு பாரதி வேலை செய்யும் கடைக்குச் சென்றாா்.
அங்கு அவா், பாரதியிடம் தகராறு செய்தாா். தகராறு முற்றவே கொடூரமாக பாரதியை தாக்கி கீழே தள்ளினாா். இதில் கீழே விழுந்ததில் பலத்தக் காயமடைந்த பாரதியை அங்கிருந்தவா்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பாரதி வெள்ளிக்கிழமை காலை இறந்தாா். இது குறித்து சூளைமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பழனியை உடனடியாக கைது செய்தனா்.