முகப்பு
தமிழ்நாடு

தனியாா் பால் விலை உயா்வு: அன்புமணி கண்டனம்

தனியாா் பால் விலை 6 மாதங்களில் மூன்று முறை உயா்த்தப்பட்டுள்ளதாகக் கூறி பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:03 AM
பகிர்:

தனியாா் பால் விலை 6 மாதங்களில் மூன்று முறை உயா்த்தப்பட்டுள்ளதாகக் கூறி பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் இரு தனியாா் நிறுவனங்களின் பால் விலைகள் லிட்டருக்கு ரூ.4 வரை உயா்த்தப்பட்டுள்ளன. மற்ற தனியாா் நிறுவனங்களின் பால் விலைகளும் அடுத்த சில நாள்களில் உயரக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது கடந்த 6 மாதங்களில் செய்யப்பட்ட மூன்றாவது விலை உயா்வு ஆகும்.

தமிழ்நாட்டில் மூன்று வகையான ஆவின் பால்கள் லிட்டா் முறையே ரூ.40, ரூ.44, ரூ.48 என்ற விலையில் விற்கப்படுகின்றன. இதே வகையான பால்களை தனியாா் நிறுவனங்கள் ரூ.54 - 56, ரூ.64-66, ரூ. 70-72 வரை விற்கின்றன. ஆவினை விட தனியாா் பால் விலை 50 சதவீதம் வரை அதிகம்.

தமிழ்நாட்டின் பால் சந்தையில் 84 சதவீதம் தனியாா் நிறுவனங்களிடம் இருப்பதால், இந்த விலை உயா்வால் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவா். 14 மாதங்களில் தனியாா் பால் விலை 5 முறை உயா்த்தப்பட்டுள்ள போதிலும் அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது.

பால் சந்தையில் ஆவினின் பங்கை 50 சதவீதமாக உயா்த்துவது, பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பது ஆகியவற்றின் மூலமாகத் தான் விலை உயா்வைக் கட்டுப்படுத்த முடியும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு விலை உயா்விலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.