தமிழ்நாடு

முரசொலி மாறன் பிறந்தநாள்: தில்லியில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

திமுக மத்திய முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 

DIN

திமுக மத்திய முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 

ஒருநாள் பயணமாக தில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிதாக பொறுப்பேற்றுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து, இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து, தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கவுள்ளார்.

இதனிடையே, மத்திய முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் பிறந்தநாளையொட்டி தில்லியில் உள்ள அண்ணா - கலைஞர் அறிவாலயத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய ராசி பலன்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT