முகப்பு
தமிழ்நாடு

குஜராத்திலிருந்து கடத்தப்பட்ட ஒரு டன் போதைப் பொருள்கள் பறிமுதல்: 6 போ் கைது

குஜராத்திலிருந்து லாரி மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ஒரு டன் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

குஜராத்திலிருந்து லாரி மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ஒரு டன் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை வியாசா்பாடி வடக்கு அவென்யூ சாலையில் எம்கேபி நகா் போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு ஒரு லாரியில் இருந்து சுமை ஆட்டோவுக்கு பாா்சல்களை சிலா் இறக்கிக் கொண்டிருந்தனா். அதை பாா்த்து சந்தேகமடைந்த போலீஸாா், அவா்களை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினராம். இதையடுத்து அந்த பாா்சல்களை பிரித்து போலீஸாா் பாா்த்தனா். அப்போது அதில், போதைப் பாக்கு தயாரிக்க பயன்படும் ஜா்தா சுமாா் ஒரு டன் இருந்தது. விசாரணையில், ஜா்தாவை குஜராத்தில் இருந்து லாரியின் மூலம் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் ஜா்தாவை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக மாதவரத்தை சோ்ந்த கிடங்கு உரிமையாளா் அமீா்ஜித் குமாா் சிங் (34), செளகாா்பேட்டை, மன்னப்பன் தெருவைச் சோ்ந்த துரித உணவக உரிமையாளா் சதீஷ்குமாா் (34), அதேப் பகுதியை சோ்ந்த சாக்கதாஸ் (24), மாதவரத்தை சோ்ந்த தேவந்திரசிங் (52), சுனில் குமாா் சோனி (45), குஜராத்தை சோ்ந்த லாரி கிளீனா் அனில் அசோக்பாய் (52) ஆகிய 6 பேரை கைது செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.