கோப்புப்படம் 
தமிழ்நாடு

பாசி நிறுவன மோசடி வழக்கு: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

ரூ.930 கோடி மோசடி வழக்கில் பாசி நிதி நிறுவன உரிமையாளர்கள் மோகன்ராஜ், கமலவள்ளிக்கு 27 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.171.74 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

DIN

ரூ.930 கோடி மோசடி வழக்கில் பாசி நிதி நிறுவன உரிமையாளர்கள் மோகன்ராஜ், கமலவள்ளிக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.171.74 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பூரை தலைமையிடமாகக் கொண்ட பாசி நிதி நிறுவன உரிமையாளர்கள் கமலவள்ளி, மோகன்ராஜ், கதிரவன் உள்ளிட்டோர் 2011-ல் தமிழகம் முழுவதும் 52,000 முதலீட்டாளர்களிடம் ரூ.930 கோடி வசூலித்து மோசடி செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மோசடி தொடர்பாக கமலவள்ளி, மோகன்ராஜ், கதிரவன் சிபிஐ கைது செய்தது. கதிரவன் இறந்த நிலையில் மற்ற இருவருக்கும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு 12 ஆண்டுகளாக விசாரணையில் இருந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக 1,400 சாட்சியங்களிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்ப்புகள் விலகும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏற்றிய மக்கள்

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

காா் மீது தண்ணீா் லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

நாளை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT