முகப்பு
தமிழ்நாடு

22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: இதுல உங்க மாவட்டம் இருக்கா?

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

தமிழ்நாடு

22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: இதுல உங்க மாவட்டம் இருக்கா?

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

இன்று நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, கரூர், திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையை பொருத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

முழு கட்டுரையைப் படிக்க →