தமிழ்நாடு

தலைவாசல்... டிராக்டர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து: 15 பேர் காயம்

DIN



சேலம் மாவட்டம், தலைவாசல் தேசிய புறவழிச்சாலையில் டிராக்டர் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 15 பேர் படுகாயமடைந்தனர். 

சேலம் மாவட்டம், தலைவாசல் தேசிய புறவழிச்சாலையில் கரும்பு பாரம் ஏற்றி சென்றுக்கொண்டிருந்த டிராக்டர் மீது பின்னால் சென்ற தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

காயமடைந்த அனைவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.   

தனியார் பேருந்தில் அதிக பயணிகள் இருந்ததாகவும், பேருந்து வேகமாக இயக்கப்பட்டதே விபத்திற்கு காரணம் என தகவல் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT