சேலம் மாவட்டம், தலைவாசல் தேசிய புறவழிச்சாலையில் டிராக்டர் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 15 பேர் படுகாயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் தேசிய புறவழிச்சாலையில் கரும்பு பாரம் ஏற்றி சென்றுக்கொண்டிருந்த டிராக்டர் மீது பின்னால் சென்ற தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தனியார் பேருந்தில் அதிக பயணிகள் இருந்ததாகவும், பேருந்து வேகமாக இயக்கப்பட்டதே விபத்திற்கு காரணம் என தகவல் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.