தமிழ்நாடு

கொளத்தூர் மறுகுடியமர்வு: தற்காலிக வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கினார் முதல்வர்

DIN


சென்னை: சென்னை கொளத்தூரில், மறுகுடியமர்வு செய்வோருக்கு தற்காலிக வீடு ஒதுக்கீடு ஆணை மற்றும் கருணைத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட இராஜா தோட்டம் திட்டப்பகுதியில், மறுகுடியமர்வு செய்யப்படவிருக்கும் 84 குடியிருப்புதாரர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கருணைத் தொகையாக தலா ரூ.24 ஆயிரம் வீதம் மொத்தம் 20.16 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் தற்காலிக ஒதுக்கீடு ஆணைகளையும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், மறுகுடியமர்வுதாரர்களுக்கு இந்தக் கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், பி.கே. சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடருக்குப் பின் எம்.எஸ்.தோனியின் 7 நிமிட விடியோ!

மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... நவீன் பட்நாயக்கின் முதல் உத்தரவு!

கால் முளைத்த நிலவு! ஜான்வி கபூர்..

பந்துவீச்சில் மிரட்டிய கேகேஆர்; 159 ரன்களுக்கு ஆட்டமிழந்த சன்ரைசர்ஸ்!

ஸ்டாக்ஹோமில் டெய்லர்!

SCROLL FOR NEXT