சென்னை: சென்னை கொளத்தூரில், மறுகுடியமர்வு செய்வோருக்கு தற்காலிக வீடு ஒதுக்கீடு ஆணை மற்றும் கருணைத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட இராஜா தோட்டம் திட்டப்பகுதியில், மறுகுடியமர்வு செய்யப்படவிருக்கும் 84 குடியிருப்புதாரர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கருணைத் தொகையாக தலா ரூ.24 ஆயிரம் வீதம் மொத்தம் 20.16 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் தற்காலிக ஒதுக்கீடு ஆணைகளையும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இதையும் படிக்க.. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் கொலை அல்ல: உயா்நீதிமன்றம்
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், மறுகுடியமர்வுதாரர்களுக்கு இந்தக் கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், பி.கே. சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.