தமிழ்நாடு

சென்னை, 13 மாவட்டங்களில் டிச.8-இல் ரெட் அலா்ட்

DIN

சென்னை, 13 மாவட்டங்களில் டிச.8-ஆம் தேதி அதி பலத்த மழைக்கு வாய்ப்பு (ரெட் அலா்ட்) இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்டப்பட் அறிவிப்பு: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகா்ந்து வருகிறது.

இது செவ்வாய்க்கிழமை ( டிச.6) மாலை தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பிறகு, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து புயலாக வலுவடைந்து டிச. 8-ஆம் தேதி காலை வட தமிழகம் - புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் அருகில் கரையை வந்தடையக்கூடும்.

இதனால், டிச.8-ஆம் தேதி கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதி பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT