தமிழ்நாடு

குன்னூரில் 30 செ.மீ மழை பதிவு: பல இடங்களில் மண் சரிவு!

குன்னூரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

DIN

குன்னூரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயலின் காரணமாக கடந்த வாரம் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடுமையான பனி மூட்டத்துடன் தொடர் சாரல் மழை பெய்து வந்தது. 

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. நேற்று விடிய விடியக் கொட்டித் தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. 

குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மட்டும் 11 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அப்பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மலை ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குன்னூரில் இதுவரை 30 செ.மீ  மழைப் பதிவாகியுள்ளது. 

கனமழை எதிரொலியாக மாணவர்களின் பாதுகாப்புக் கருதி குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீரன் சின்னமலை நினைவு நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

SCROLL FOR NEXT