தமிழ்நாடு

தமிழ்ச் செம்மல், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

DIN

2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

முன்னதாக, 8 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமைத் தொகையை அவர்களின் மரபுரிமையரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

தமிழ்ச் செம்மல் விருது

2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுகளை, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி. சிவசிதம்பரம், இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் மா. சோதி, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த புலவர் அ.மாயழகு, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முத்துரத்தினம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆ.நாகராசன், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த  முனைவர் கடவூர் மணிமாறன், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரா. துரைமுருகன், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த புலவர் சு. கந்தசாமி பிள்ளை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த இரா. எல்லப்பன் சார்பில் அவரது குடும்பத்தினரிடமும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆ. இரத்தினகுமார், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மானூர் புகழேந்தி;

சிவங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் வ. தேனப்பன், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த எம்.கே. சுப்பிரமணியன், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த வே. மாணிக்காத்தாள், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இரா. மோகன் குமார், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுக சீதாராமன், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் கண்ணிமை, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த துரை. தில்லான், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த க. பட்டாபிராமன் சார்பில் அவரது குடும்பத்தினரிடமும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வ. பாலசுப்பிரமணியன்;

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வ. சுமதி, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ. லோகநாதன், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த க.பரமசிவன், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த செ. கு. சண்முகம், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரெ. சண்முக வடிவேல், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் அ. கணேசன், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆ. சிவராம கிருஷ்ணன், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தேனி சீருடையான்;

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மு. சொக்கப்பன், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சி. கைலாசம், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த போ. மணிவண்ணன், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீ.கே. கஸ்தூரிநாதன், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செ. வினோதினி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நெல்லை. ந. சொக்கலிங்கம், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ச. பவுல்ராஜ், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அ. சுப்பிரமணியன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த பேராசிரியர் ப. வேட்டவராயன் சார்பில் அவரது குடும்பத்தினரிடமும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ம. நாராயணன் ஆகிய 38  தமிழறிஞர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருதுடன், விருதுத்தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, பொன்னாடை அணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.    

சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது 

2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை செ. சுகுமாரன், செ. இராஜேஸ்வரி, முனைவர் மு. வளர்மதி, முனைவர் இராக. விவேகானந்த கோபால்,  முனைவர் அ.சு. இளங்கோவன். முனைவர் வீ. சந்திரன், முனைவர் ரா. ஜமுனா கிருஷ்ணராஜ், பேராசிரியர் தமிழ்ச்செல்வி, மறைந்த ந. தாஸ், முனைவர் மா. சம்பத்குமார் சார்பில் அவரது குடும்பத்தினரிடமும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுடன் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகையாக இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின், வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பு  செய்தார்.  

இந்நிகழ்ச்சியில்  தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல்  துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்  துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீலகிரி, கோவையில் 3 நாள்களுக்கு கனமழை!

பாகிஸ்தானில் புதிதாக 2 போலியோ பாதிப்புகள் உறுதி! 2025-ல் அதிகரிக்கும் பாதிப்புகள்!

மரியம் டக்கா.. காஸாவில் கொல்லப்பட்ட அசோசியேட் பிரஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர்!

சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் களமிறங்கும் வனிதா விஜயகுமார்!

கெனிஷா கடவுள் கொடுத்த வரம்: ரவி மோகன்

SCROLL FOR NEXT