மாசிமகம் வழிபாட்டையடுத்து வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபழனியாண்டவர். 
தமிழ்நாடு

அருப்புக்கோட்டை ஸ்ரீபழனியாண்டவர் கோவிலில் மாசிமகம் சிறப்பு வழிபாடு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருநகரம் புளியம்பட்டி ஸ்ரீபழனியாண்டவர் சுவாமி கோவிலில் வியாழக்கிழமை மாசி மகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருநகரம் புளியம்பட்டி ஸ்ரீபழனியாண்டவர் சுவாமி கோவிலில் வியாழக்கிழமை மாசி மகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அருப்புக்கோட்டை திருநகரம் புளியம்பட்டி ஸ்ரீபழனியாண்டவர் கோவிலில் மாசி மகம் நன்னாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது பேரீச்சம்பழம், வாழைப்பழம், கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை, தேன் கலந்த பஞ்சாமிர்தக் கலவையாலும், பன்னீர், சந்தனம், குங்குமம், கஸ்தூரி மஞ்சள், பால், உள்ளிட்ட 21 வகை சிறப்புப்பொருள்களாலும் ஸ்ரீபழனியாண்டவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு மலரலங்காரத்தில் அருள்மிகு பழனியாண்டவர் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அப்போது உலக நன்மை வேண்டியும் தொற்றிலிருந்து உலக மக்களைக்காத்து தொழில், பொருளாதாரம், ஆயுளாரோக்கியம் மேம்படவும் சிறப்பு சங்கல்ப அர்ச்சனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் நேரில் கலந்து கொண்டு வழிபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT