எடப்பாடி: எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட 13 ஆவது வார்டுக்கு உள்பட்ட மோளப்பாறை வாக்குப்பதிவு மையத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதானது, இதையடுத்து அந்த வாக்கு மையத்தில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆணையத்தின் முன் வாக்களிக்க காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மேட்டூரில் களைகட்டியது