தமிழ்நாடு

சீர்காழி அருகே பாய்லர் வெடித்து இருவர் பலி; 3 பேர் காயம்

DIN

சீர்காழி: சீர்காழி அருகே பாய்லர் வெடித்ததில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 3 பேர் காயமடைந்தனர். 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா தொடுவாய் கிராமத்தில் அலி உசேன் என்பவருக்கு சொந்தமான பிஸ்மி பிஷ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் மீன் விருந்து எண்ணை மற்றும் இறால் பவுடர் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. 

இறால் பவுடர் தீவனம் தயாரிக்கும் பிஸ்மி பிஷ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்.

இந்த தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்தது. இதில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அருண்ஓரானா (25), பல்ஜித்ஓரான் (20) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.  

வெடித்துச் சிதறிய பாய்லர்

இதனைக் கண்ட சக ஊழியர்கள் படுகாயமடைந்த பாய்லர் ஆபரேட்டர் உச்சிமேடு ரகுபதி (53), பந்தநல்லூர் மாரிதாஸ் (45), திருமுல்லைவாசல் ஜாவித் (29) ஆகிய 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் 

சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ள பாய்லர் ஆபரேட்டருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள். 

பாய்லர் வெடித்துச் சிதறியதில் காயமடைந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ள பாய்லர் ஆபரேட்டரிடம் விசாரணை நடத்தும் மருத்துவர்கள். 

சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT