தென் தமிழகம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (பிப்.24) மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது: குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தென் தமிழகம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (பிப்.24) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பிப்.25: தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பிப்ரவரி 25-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பிப்.26: தென் தமிழகம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பிப்ரவரி 26-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
பிப்.27: தென் தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பிப்ரவரி 27-ஆம் தேதி லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.