முகப்பு
தமிழ்நாடு

சென்னை எம்.ஐ.டி.யில் 46 மாணவர்களுக்கு கரோனா

சென்னை எம்.ஐ.டி. கல்லூரியை சேர்ந்த 46 மாணவர்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:02 AM
சென்னை எம்.ஐ.டி.யில் 46 மாணவர்களுக்கு கரோனா
பகிர்:

சென்னை எம்.ஐ.டி. கல்லூரியை சேர்ந்த 46 மாணவர்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியாகியுள்ளது.

குரோம்பேட் பகுதியில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி(எம்.ஐ.டி.) மாணவர்கள் 1,417 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், 46 மாணவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பலரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் நிலவுகிறது.

இதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தை ஒருவாரம் மூட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.