தமிழக சட்டப்பேரவையின் கேள்வி நேரம் முதல்முறையாக நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் நேற்று தொடங்கிய நிலையில் நாளை வரை நடைபெறவுள்ளன.
இன்று காலை கூட்டம் கூடியவுடன், கடந்த காலங்களில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முப்படைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 பேர், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து கேள்வி நேரத்தை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. முதல் கேள்வியாக பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி கேட்டார்.