குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு விரைவில் குணமடைய விழைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
கரோனா பாதிப்பிலிருந்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு விரைவில் குணமடைய விழைகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரோனா பாதிப்பிலிருந்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு விரைவில் குணமடைய விழைகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அறிவுரையின்படி, ஹைதராபாத்தில் அவர் தனிமைப்படுத்திக்கொண்டார்.
இந்த நிலையில் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு விரைவில் குணமடைய விழைகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.