தமிழ்நாடு

சா‌ஸ்‌த்​ரா​வி‌ன் புகழ்பெற்ற முன்னாள்மாண​வ‌ர்​க​ளு‌க்கு விருது வழ‌ங்​கு‌ம் விழா

DIN


தஞ்சாவூர்: சென்னையில் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த 1994-ஆம் ஆண்டில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்ற மனோஜ் வர்கீஸþக்கு பெரு நிறுவனத் தலைமைப் பிரிவில் விருது வழங்கப்பட்டது. இவர் மகேந்திரா அன்ட் மகேந்திராவில் துறைத் தலைவராக உள்ளார். 

பொதுத் தொண்டில் சிறந்து விளங்குவதற்காக பேராசிரியர்கள் எஸ். கல்யாண்குமார், கே. சுந்தர்ராஜன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அலபாமா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக உள்ள இருவரும் 1998- ஆம் ஆண்டில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்றனர்.

2007-ஆம் ஆண்டின் பயோடெக் மாணவர் சி. வாசுதேவன் தொழில்முனைவோரில் சிறந்து விளங்குவதற்காக விருது வழங்கி, கெüரவிக்கப்பட்டார். இவர் நின்ஜூகார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர். 

இந்த விருதுகளை இண்டலெகட் டிசைன் நிறுவனத் தலைமை நிர்வாகியும், முன்னாள் மாணவர் சங்கச் செயலருமான எஸ்.வி. ரமணன் வழங்கினார்.

இவ்விழாவில் துணைவேந்தர் எஸ். வைத்திய சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT